லைசன்ஸ் பெற்று யோகா பயிற்சி வகுப்பு நடத்த சவூதி அரேபியா அரசு அனுமதி அளித்துள்ளது. விளையாட்டில் ஒரு பகுதியாக யோகாவை சவுதி அரசு அங்கீகரித்துள்ளது.

இந்தியாவில்  பிரதமர் மோடி பதவியேற்ற முதல் யோகாவுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார்.

பின்னர் அவரது கோரிக்கையை ஏற்று ஜூன் 21ம் தேதியை சர்வதேச யோகா தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

சீனா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் யோகாவை மக்கள் ஆர்வமாக செய்து வருவது குறிப்பிடத்தக்கது.