கோலாலம்பூர்:

லேசியா வந்திருக்கும் சௌதி மன்னரை கொலை செய்ய நடந்த சதியை முறியடித்திருப்பதாக அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

செளதி மன்னர் சமீபத்தில் மலேசியாவிற்கு வருகை தந்திருந்த போது அவரை படுகொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை முறியடித்துவிட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர்கள் தெரிவித்ததாவது:

செளதி மன்னர் சல்மன் மலேசிய சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது அவரைக் கொலை செய்ய ஹூதி கிளர்ச்சிப்படையைச் சேர்ந்தவர்கள் திட்டமிருந்தார்கள். இதற்காக, அந்த இயக்கத்தைச் சேர்ந்த நால்வர் மலேசியாவுக்குள் ஊடுருவி இருந்தனர்..

இவர்களின் நடமாட்டத்தை அறிந்த மலேசிய உளவுத்துறையினர், அந்நாட்டு பாதுகாப்பு படையினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து அவர்களை மலேசிய பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

வளைகுடா பகுதி ஏமனில்  ஹூதி கிளர்ச்சியாளர்களை எதிர்த்து செளதி தலைமையிலான கூட்டணிப்படைகள் எதிர்த்து சண்டையிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.