டில்லி:

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் செல்லமேஸ்வரர், ரஞ்சன் கோகாய் உள்ளிட் 5 நீதிபதிகள் அடங்கிய கொலிஜீயம் குழு உத்தரகாண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.எம்.ஜோசப்பை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க பரிந்துரை செய்திருந்தது. இதற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்தது.

இந்நிலையில் கொலிஜீயம் இன்று கூடி நீதிபதி ஜோசப் நியமனம் தொடர்பாக விவாதித்தது. அப்போது நீதிபதி ஜோசப் பெயரை மீண்டும் பரிந்துரை செய்ய கொலீஜியம் முடிவு செய்தது. எனினும் இவரது பெயரோடு மேலம் சில நீதிபகளின் பெயர்களையும் சேர்த்து பரிந்துரை செய்ய முடிவு செய்துள்ளது.

இதர நீதிபதிகளின் பெயர் வரும் 16ம் தேதி நடக்கும் கூட்டத்தில் முடிவு செய்யப்படவுள்ளது. அதுவரை ஜோசப் பெயரை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்போவதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.