டில்லி,

ராஜீவ் கொலை கைதிகளை விடுதலை செய்வது குறித்து, தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கு சிபிஐ -ல் நடத்தப்பட்டது. அதன் காரணமாக இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க தமிழக அரசுக்கு எந்தவித உரிமையும் கிடையாது என்று நீதிபதிகள் கூறி உள்ளனர்.

மேலும் இந்த வழக்கு மத்திய அரசின் மேற்பார்வையில் நடைபெற்றது. ஆகவே தமிழக அரசுக்கு ராஜீவ் கொலை கைதிகளை விடுவிக்க உரிமையில்லை என்று கூறி தமிழக அரசு மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பு கூறியுள்ளது.