சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளில் நாளை முதல் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

மாணவர் சேர்க்கையின் போது சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி, 1, 6 மற்றும் 9ம் வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 17ம் தேதியிலும் 24ம் தேதியில் இருந்து மேல்நிலை வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை தொடங்க அரசு, தனியார் பள்ளிகளுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இந் நிலையில், அரசு, தனியார் பள்ளிகளில் நாளை முதல் எல்.கே.ஜி, 1ம் வகுப்பு, 6ம் வகுப்பு மற்றும் 9ம் வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. சமூக இடைவெளியை தவறாது பின்பற்றி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன், மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

முதலில் மாணவரை சேர்த்துவிட்டு, பின்னர் தேவையான சான்றிதழ்களை பெற்று கொள்ள தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.