சிம்லா: கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததால் இமாச்சல பிரதேசத்தில் பிப்ரவரி 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக 2020ம் ஆண்டு மார்ச் முதல் கல்வி நிலையங்கள் மூடப்பட்டன. தொற்று பாதிப்புகளுக்கு ஏற்ப அந்தந்த மாநிலங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தற்போது படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன.

இந் நிலையில் இமாச்சல பிரதேசத்தில் 5, 8 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பிப்ரவரி 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. மலைப்பகுதிகளில் உள்ள பள்ளிகள் பிப்ரவரி 15 முதல் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்துறை பயிற்சி நிறுவனங்கள், பொறியியல் கல்லூரிகளும் பிப்ரவரி 1 முதல் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அனைவருக்கும் முகக்கவசம் கட்டாயம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.