ன்றிகளின் உடல் உறுப்புகளை மனிதர்களுக்கு பொருத்துவது தொடர்பாக நடந்த தொடர் ஆய்வில் பல வருட முயற்சிக்குப் பிறகு ஆய்வாளர்கள் சாதனை புரிந்துள்ளனர்.

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக உலகம் முழுவதும்  பல லட்சம் பேர் காத்திருக்கிறார்கள்.  அமெரிக்காவில் மட்டும் 1 லட்சத்து 16 ஆயிரத்து 800 பேர் உள்ளனர்.  அவர்களுக்கு பொருத்துவதற்கான உடல் உறுப்புகள் தட்டுப்பாடு இருப்பதே இதற்குக் காரணம்.

இதையடுத்து பன்றிகளின் உடல் உறுப்புகளை மனிதர்களுக்கு பொருத்தும் முயற்யில் ஆய்வாளர்கள் ஈடுபட்டனர். இது குறித்த ஆய்வு பல வருடங்களாக நடந்து வந்தது.

பன்றியின் சிறுநீரகம், இதயம் போன்ற உறுப்புகளை மனிதர்களுக்கு பொருத்த முடியும் என்பதை நிரூபித்தனர்.  ஆனால் நோய் தொற்று ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் என்ற நிலை இருந்தது.

ஆகவே பன்றியின் உடல் உறுப்புகளில் உள்ள மரபணுக்களில் செயல்படாமல் இருக்கும் ‘பெர்வ்’ எனப்படும் வைரஸ்களை அகற்றும் ஆய்வில் ஆய்வாளர்கள் ஈடுபட்டனர். தற்போது அவற்றை அகற்றி வெற்றி பெற்று உள்ளனர்.

ஹாவர்டு பல்கலைக் கழகத்தை சேர்ந்த மரபியல் நிபுணர்கள் ஜார்ஜ் சர்ச் மற்றும் லுகான் யங் ஆகியோர் இந்த ஆய்வில் ஈடுபட்டு சாதனை படைத்துள்ளனர். . இதுவரை 37 பன்றி உறுப்புகளில் பெர்வ் வைரஸ் தொற்றுகள் அகற்றப்பட்டுள்ளன.

எதிர்காலத்தில் இத்தகைய தொடர் ஆய்வுகளின் மூலம் பன்றிகளின் உடல் உறுப்புகளை உடல் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை மூலம் மனிதர்களுக்கு பயன்படுத்த முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.