சென்னை

மிழக சட்டப்பேரவை தேர்தலில் அமமுக மற்றும் தேமுதிக உடனான தொகுதிப் பங்கீடு இன்று முடிவடையும் என டிடிவி தினகரன் கூறி உள்ளார்.

வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் திமுக மற்றும் அதிமுக கூட்டணி முக்கிய கட்சிகளாக உள்ளன.   இதில் தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாததால் அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேறியது.

மேலும் அக்கட்சி தனியாகத் தேர்தலில் போட்டியிடும் என எதிர்பார்ப்பு இருந்த நிலையில் கடந்த 2 நாட்களாக அமமுகவுடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.  சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சி பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், “அமமுக மற்றும் தேமுதிகவுடன் தொடர்ந்து கூட்டணி பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.  இன்று தொகுதிப் பங்கீடு முடிவடைந்து விவரங்கள் அறிவிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.