கோவை: அதிமுகவுடன் விரைவில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தமிழக பாஜக தலைவர் முருகன் கூறி உள்ளார்.

கோவை மாவட்டம், சின்னியம்பாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: பாஜக, அதிமுக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. கூடிய விரைவில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெறும்.

இரட்டை இலக்கத்தில் எங்கள் உறுப்பினர்கள் பேரவையில் இடம் பெறுவார்கள். அனைத்து மாவட்ட மக்களிடமும் கருத்துகளை கேட்டு அதன் அடிப்படையில் தேர்தல் அறிக்கையை தயாரித்து வருகிறோம்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து அரசுக்கு தெரிவிக்கப்படும். கோவையில், வரும் பிப்ரவரி 25ம் தேதி நடைபெறும் அரசு விழா மற்றும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார் என்று தெரிவித்துள்ளார்.