லண்டன்: பாகிஸ்தான் – இங்கிலாந்து அணிகளுக்கான இரண்டாவது டெஸ்ட் போட்டி, டிராவில் முடிவடைவது 100% உறுதியாகியுள்ளது.

மழையால் ஆட்டம் பெரியளவில் தடைப்பட்டதால், நான்காம் நாள் ஆட்டமும் முடிந்த நிலையில், இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸை துவங்கி, 5 ஓவர்கள்தான் ஆட முடிந்தது.

முன்னதாக, பாகிஸ்தான் அணி, தனது முதல் இன்னிங்ஸில் 236 ரன்களை எடுத்தது. அந்த அணியின் முகமது ரிஸ்வான் அதிகபட்சமாக 72 ரன்களை எடுத்தார்.

இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளையும், ஆண்டர்சன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இரண்டாம் இன்னிங்ஸை துவக்கி, 5 ஓவர்கள் மட்டுமே ஆடியுள்ள இங்கிலாந்து அணி, 7 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்துள்ளது.

இந்நிலையில், இன்னும் ஒருநாள் ஆட்டமே பாக்கியுள்ளதால், இப்போட்டி 100% டிராவில் முடிவடையும் என்பதே அனைவருக்கும் தெரிந்த உண்மை.