ன்று தமிழகத்தை முழுமையாக ஆக்கிரமித்திருப்பது “பெரிய முதலாளி”  நிகழ்ச்சி. இதில் சித்திரமான நடிகைக்கு அடுத்து மக்களின் ஆதரவைப் பெற்றிருப்பவர் நட்பு நாயகன்.

ஆள் இல்லாதபோது ஏதாவது கமெண்ட் அடித்தாலும் போட்டியாள்ரகளிடம் சஜகமாய் ஜாலியாக பேசுவது, பிரச்சினைகளை தீர்க்க ஓடிவருவது, படத்தில் நடிக்காத அந்த நடிகை உடல் நலம் இல்லையென்றதும் ஓடி வந்து ஆறுதல் அளித்தது  பிரம்மாண்ட நாயகி வெளியேற்றப்பட்டபோது கண்ணீர் வடித்தது..  என்று ஸ்கோர் வாங்குகிறார் அந்த நட்பு நாயகன்.

இந்த நிலையில்தான், “அவர் ரொம்பவும் நட்பு பாராட்டுவார் என்பது உண்மைதான். அப்படி நட்பு பாராட்டியதால் சீரழிந்த குடும்பங்கள் பல. அதற்கு ஒரு உதாரணம், அந்த டான்ஸ் மாஸ்டர் குடும்பம்” என்கிறார்கள் கோலிவுட்டில்.

அதென்ன சம்பவம்?

சென்னை புறநகர் பகுதியில் நடன பள்ளி நடத்தி வந்தார் அந்த பெண்மணி. பொறியாளரான கணவர், தனியாக நிறுவனம் நடத்த வந்தார்.

காதல் திருமணம். மகிழ்ச்சியான வாழ்க்கையின் வெளிப்பாடாக ஒரு பெண் குழந்தை.

அமைதியாக போய்க்கொண்டிருந்த குடும்ப்பத்தில் நட்பு நாயகன் நுழைந்தார்.

நடன பெண்மணி, இன்னொரு நடன பள்ளியைத் துவங்கினார். அதன் திறப்பு விழாவுக்கு சினிமா பிரபலம் யாரேனும் வந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தார். அவரது கருத்தை ஏற்றுக்கொண்ட கணவர், தனது நண்பர் மூலம் நட்பு நாயகனை தொடர்புகொண்டார்.

நடன பள்ளியை திறந்து வைக்க வேண்டும் என்று இவர் கோரிக்கை வைக்க.. நட்பு நாயகனும் ஒப்புக்கொண்டார்.

விழாவுக்கு வந்தார். வந்தவர் நடன மங்கையிடம் பாசத்துடன் பழக ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் இந்த பாசம் எல்லை மீறியதாக உணர்ந்தார் நடன மங்கையின் கணவர்.

குடும்பத்தில் விவகாரம் வெடித்தது.

இந்த நிலையில்தான் நடன மங்கையின் கணவர், காவல்துறையில் புகார் அளித்தார்.

“நான் என் மனைவி குழந்தையுடன் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வந்தேன். இடையில் புகுந்த நட்பு நாயகன் என் மனைவியை மயக்கி கடத்திச் சென்றுவிட்டார். என் மனைவியும் அந்த நட்பு நாயகன் சொல்லுக்கு கட்டுண்டு கிடந்தார்.

வேறு வழியில்லமல் என் குழந்தையோடு தனியாக வாழ்ந்துவந்தேன். இந்த நிலையில் என் மனைவியும் அந்த நட்பு நாயகனும் வந்து என் குழந்தையை கடத்திச் சென்றுவிட்டார்கள்.

இப்போதுகூட என் மனைவி திருந்தி வந்தால் சேர்ந்து வாழ தயாராக இருக்கிறேன். ஆனால் என் குடும்பத்தைச் சீரழித்த நட்பு நாயகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அந்த புகாரில் கூறியிருந்தார்.

இது அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நட்பு நாயகனோ, “நடனமங்கைக்கும் அவரது கணவருக்கும் குடும்பப் பிரச்சினை. தேவையில்லாமல் என்னை இழுக்கிறார். எனக்கு அதில் எந்தத் தொடர்பும் இல்லை. அவர் மீது நான் காவல்துறையில் புகார் அளிக்கப்போகிறேன்” என்றார்.

நடன மங்கையும், “எனக்கும் என் கணவருக்கும்தான் பிரச்சினை. இதில் நட்பு நாயகனுக்கு தொடர்பில்லை” என்றார்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் அப்படியே மெல்ல அடங்கியது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் விவகாரம் பெரிதாகியிருக்கிறது.

“பிரச்சினைகளுக்குப் பிறகு மீண்டும் என்னுடன் மனைவி சேர்ந்து வாழ்ந்தார். ஆனால் இரு மாதங்களுக்கு முன் மீண்டும் என் மனைவியுடன் தொடர்புகொண்டு அழைத்துச் சென்றுவிட்டார் நட்பு நாயகன்.  இப்போது அவர் நிகழ்ச்சி ஒன்றில் பங்குகொண்டிருக்கிறார். ஆனால் என் மனைவியை எங்கே மறைத்துவைத்திருக்கிறார் என்று தெரியவில்லை” என்று புலம்புகிறாராம் நடன மங்கையின் கணவர்.

அவர் மீண்டும் காவல்துறையில் புகார் அளிக்கக்கூடும்” என்கிறார்கள்.

நட்பு நாயகனுக்கு நெருங்கிய வட்டாரத்தினர், “அந்த நடன மங்கையுடன் நட்புடன்தான் எங்கள் நாயகன் பழகினார். அந்த பெண்மணியே கணவரை பிடிக்காமல் பிரிந்துவிட்டார்” என்கிறார்கள்.

எப்படியோ நடன மங்கையின் கணவர் மீண்டும் காவல்துறையை நாடினால் விவகாரம் மறுபடி வெடிக்கும்”  என்கிறார்கள் கோலிவுட் வட்டாரத்தில்.