சென்னை:

தூத்துக்குடியில் போலீசார் நடத்திய மனிதாபிமானமற்ற  துப்பாக்கிச் சூடு படுகொலையைக் கண்டித்து நாளை தலைமைச் செயலகம் முற்றுகையிடப்படும் என மே 17 இயக்கம் அறிவித்துள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் போலீசார் நடத்திய காட்டுமிராண்டித் தனமான துப்பாக்கி சூட்டில் இதுவரை 13 பேர் உயரிழந்துள்ளனர். இது நாடு முழுவதும் அதிர்வலைகளை உருவாக்கி உள்ளது.‘

இந்த நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு படுகொலையைக் கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் அனைத்து அமைப்புகளும், கட்சிகளும் இணைந்து தலைமைச் செயலக முற்றுகைப் போராட்டத்தை நடத்தவுள்ளன.

மே 24 ஆம் தேதியான நாளை மாலை3 மணிக்கு சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் இருந்து கோட்டை நோக்கி முற்றுகை  போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.