டில்லி:

டில்லியில் 11 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஹரியானா மாநிலத்தில் ராம் ரஹீம் சிங்கின் ஆதரவாளர்களுக்கும், போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட கலவரத்தில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். 250க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

இதை தொடர்ந்து டில்லியில் 11 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. செப்டம்பர் 8ம் தேதி வரை இது அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.