சேலம்:

தமிழக அரசுக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் எதிராக பொதுமக்களிடம் நோட்டீஸ் விநியோகித்ததாக சேலம் போலீசாரால் தொடரப்பட்ட வழக்கில் தினகரன், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. வெற்றிவேல், பெங்களூரு புகழேந்தி ஆகியோரது பெயர்களும் சேர்க்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த வழக்கில் கொண்டலாம்பட்டி பகுதி செயலாளர் விநாயகம் அளித்த புகாரின் அடிப்படையில், முன்னாள் எம்.எல்.ஏ., வெங்கடாசலம், பகுதி செயலாளர் சரவணன் உள்ளிட்ட தினகரன் ஆதரவாளர்கள் 10 பேரை சேலம்- அன்னதானப்பட்டி போலீசார் கைது செய்துள்ளனர்.

இவர்கள் உள்பட 14 பேர் மீது தேச துரோக பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தினகரன் மீதும் நடவடிக்கை பாயலாம் என தெரிகிறது.