சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

உடல்நலக்குறைவு காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டு உள்ளார். அங்கு சீமானுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

53 வயதுடைய சீமான், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ள விவரம் அறிந்த அக்கட்சி தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனிடையே வழக்கமான பரிசோதனைக்காக தான் சீமான் மருத்துவமனைக்கு சென்றார் என்றும், அவர் சோதனை முடிந்து வீடு திரும்புகிறார் என்றும் அவரது கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.