பாபர் மசூதி இடிப்பை சட்டவிரோதம் எனும் உச்ச நீதிமன்றம், இடித்தவர்களுக்கு எவ்விதத் தண்டனையும் வழங்காதது பெருத்த ஏமாற்றம்த்தை அளிப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

அயோத்தி நில உரிமை வழக்கில் 3 மாதங்களில் அறக்கட்டளை அமைத்து, ராமர் கோவில் கட்ட வேண்டும் என்றும், மசூதி அமைக்க ஆயோத்தியிலேயே 5 ஏக்கர் அளவுக்கு இஸ்லாமியர்களுக்கு மாற்று நிலம் ஒதுக்க வேண்டும் என்றும் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. அதேநேரம், மசூதியை இடித்தது குற்றம் என்றும் தனது தீர்ப்பில் உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

இந்நிலையில் இது தொடர்பாக டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள சீமான், “அயோத்தி வழக்கில் வழங்கப்பட்டது தீர்ப்புதானே ஒழிய, நீதியல்ல !

பாபர் மசூதி இடிப்பை சட்டவிரோதம் எனும் உச்ச நீதிமன்றம், இடித்தவர்களுக்கு எவ்விதத் தண்டனையும் வழங்காதது பெருத்த ஏமாற்றம்! பாபர் மசூதி இடிப்பென்பது இசுலாமிய இறையியலுக்கு மட்டுமல்லாது, இந்தியாவின் இறையாண்மைக்கும் எதிரானது” என்று தெரிவித்துள்ளார்.