விஞ்ஞானிகள் ‘உயரடுக்கு கட்டுப்பாட்டாளர்’ லோரன் வில்லன்பெர்க், 66, ஐ விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக ஆய்வு செய்துள்ளனர். இந்த கலிஃபோர்னிய பெண்ணின் உடல் இயற்கையாகவே நோய்த்தொற்றுடன் போராடுகிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால், இப்போது கல்வியாளர்கள் இவரைக் குணப்படுத்தப்பட்ட எச்.ஐ.வி நோயாளிகளின் பட்டியலில் ‘சேர்க்கப்படலாம்’ என்று கூறுகின்றனர். இவர்களில் ‘பெர்லின்’ மற்றும் ‘லண்டன்’ நோயாளி மட்டும் எச்.ஐ.வி. யில் இருந்து குணமாக அவர்களுக்கு ஒரே நேரத்தில் புற்றுநோயிலிருந்து விடுபட எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கு முன்பு எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் மருத்துவ சிகிச்சை அல்லது எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை இன்றி குனமாகியுள்ளார். அப்பெண் லோரன் வில்லன்பெர்க்கை விஞ்ஞானிகள் பல ஆண்டுகளை ஆய்வு செய்துள்ளனர். 66 வயதான அவர் குணமாக ஒருபோதும் மருந்து எடுக்கவில்லை. அவரது உடல் இயற்கையாகவே நோய்த்தொற்றுடன் போராடுகிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால் இப்போது ஆய்வாளர்கள் குணப்படுத்தப்பட்ட எச்.ஐ.வி நோயாளிகளின் பட்டியலில் ‘பெர்லின் நோயாளி’ திமோதி ரே பிரவுன் மற்றும் ‘லண்டன் நோயாளி’ ஆடம் காஸ்டில்லெஜோ ஆகியோருக்கு அடுத்தபடியாக சேர்க்கப்படலாம் என்று கூறுகின்றனர்.

திரு பிரவுன், 54, மற்றும் திரு காஸ்டில்லெஜோ, 40, ஆகிய இருவருக்கும் புற்றுநோய் இருந்தது, மேலும் எச்.ஐ.வி-எதிர்ப்பு மரபணுக்களைக் கொண்ட ஒரு நன்கொடையாளரிடமிருந்து எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை வழங்கப்பட்டது. எம்.எஸ். வில்லன்பெர்க் – 1992 இல் கண்டறியப்பட்டவர் மற்றும் ஒரு ‘உயரடுக்கு கட்டுப்பாட்டாளர்’ என்று கருதப்படுகிறார். ஏனெனில் சிகிச்சையில்லாமல் வைரஸைத் தானே கட்டுப்படுத்தும் அரிய திறனைக் கொண்டிருக்கும் இவர், ஒருபோதும் ஆபத்தான சிகிச்சையைப் பெறவில்லை. தற்போது, எம்.ஜி.எச், எம்.ஐ.டி மற்றும் ஹார்வர்டின் ராகன் இன்ஸ்டிடியூட் ஆராய்ச்சியாளர்கள் இக்கலிஃபோர்னிய பெண் எவ்வித எச்ஐவி நோய்க்கான தடயங்களையும் சாத்தியமான சோதனைகள் மூலம் கண்டுபிடிக்கவில்லை.

செல்வி வில்லன்பெர்க்கின் இரத்த அணுக்களில் 1.5 பில்லியனைப் பகுப்பாய்வு செய்த மேம்பட்ட தொழில்நுட்பம் வைரஸின் சிறிய எண்ணிக்கையிலான ஆனால், இனப்பெருக்கம் செய்யும் தன்மை இல்லாத எச்ஐவி கண்டறியப்பட்டது. ஆஸ்திரேலியாவில் உள்ள தி பீட்டர் டோஹெர்டி இன்ஸ்டிடியூட் ஃபார் இன்ஃபெக்ஷன் அண்ட் இம்யூனிட்டியின் இயக்குனர் டாக்டர் ஷரோன் லெவின், நியூயார்க் டைம்ஸிடம் கூறும்போது, ‘ஒரு வித்தியாசமான வழியின் மூலம், தன்னைத் தானே குணப்படுத்திக் கொள்ளும், ஒரு சிகிச்சை முறையைக் கொண்டிருக்கும் பட்டியலில் அவரைச் சேர்க்கலாம்.’ என்று கூறினார். ரெட்ரோவைரல் எதிர்ப்பு மருந்துகள் எடுத்துக் கொள்ளாத பிற 63 நோயாளிகளுக்கும் எச்.ஐ.வி அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால், அவை இனப்பெருக்கம் செய்யும் திறன் கொண்டிருக்கவில்லை.

நேச்சர் இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு, இந்த நபர்கள் ஒரு ‘செயல்பாட்டு சிகிச்சை தன்மையை’ அடைந்துள்ளனர் என்று கண்டுபிடிப்புகள் கூறுகின்றன. உலகெங்கிலும் எச்.ஐ.வி.யுடன் வாழும் 37 மில்லியன் மக்களில் 0.5 சதவீதம் பேர் மட்டுமே இவ்வித “எலைட் கன்ட்ரோலர்கள்” உள்ளனர் என்று நம்பப்படுகிறது.