வார்தா:

‘செஃல்பி’ மோகத்தின் காரணமாக சுற்றுலா வந்த 3 நர்சிங் மாணவிகள் உள்பட 4 பேர் அணை தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக பலியானார்கள்.

மகாராஷ்டிரா மாநிலம் மகா காளி அணையில், சமபவத்தன்று  சுற்றுலா வந்த 3 நர்சிங் மாணவிகள் ‘செஃல்பி’ எடுக்க முயன்றபோது அணையில் விழுந்து பலியானார்கள். அவர்களை காப்பாற்ற முயன்ற மாணவனும் பலியானான்.

மகாராஷ்டிரா மாநிலம் வார்தா மாவட்டத்தில் உள்ள காரன் கானா கிராமத்தில் உள்ளது  மகா காளி அணை. இங்கு சம்பவத்தன்று நர்சிங் கல்லூரியை சேர்ந்த 3  நர்சிங்  மாணவிகள் சுற்றுலாவாக இந்த அணைப் பகுதியை சுற்றிப் பார்க்க வந்திருந்தனர்.

அப்போது செல்பி மோகத்தின் விளைவாக, தண்ணீர் நிறைந்திருந்த அணையின் கரையில் நின்று ‘செஃல்பி’ எடுக்க விரும்பினர். பின்னர் சிறிது சிறிதாக தண்ணீரில் இறங்கி ‘செஃல்பி’ எடுத்து வந்தனர்.

அப்போது, அவர்களில் ஒரு மாணவி கால் வழுக்கி தண்ணீருக்குள் விழுந்தார். அவரை பிடிக்க முயன்ற மற்ற இரு மாணவிகளும் சேர்ந்த தண்ணீருக்குள் விழுந்தனர். அந்த பகுதி ஆழமான பகுதியாதலால் நீச்சல் தெரியாதாதால் மூன்று மாணவிகளும் தண்ணீருக்குள் மூழ்கினர்.

இதை பார்த்த 10வது வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் அவர்களை காப்பாற்ற தண்ணீருக்குள் குதித்தான். ஆனால், அவனால் அவர்களை காப்பாற்ற முடியாமல் அவனும் தண்ணீரில் மூழ்கினார்.

இதுகுறித்து உடனடியாக  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அணையில் மூழ்கிய 4 பேரையும் காப்பாற்ற முயன்றனர்.

ஆனால், அவர்கள் 4 பேரும் தண்ணீர் குடித்து மூழ்கியதால், அவர்களது உடல்களைத்தான் மீட்க முடிந்தது.

‘செஃல்பி மோகம் காரணமாக 3 மாணவிகளும், அவர்களை காப்பாற்ற முயன்ற ஒரு மாணவனும் தண்ணீரில் மூழ்கி இறந்தது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.