jadeja 4
இந்த வார தொடக்கத்தில், ஜூனாகத் கிர் காட்டில் சிங்கங்களுடன் சேர்ந்து புகைப்படத்திற்கு போஸ் கொடுத்து, அந்த செல்ஃபிக்களை சமூக ஊடகங்களில் ஏற்றி, பினர் அவை பரவியதினால் பிரச்சனையில் மாட்டிக் கொண்டார் கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா.
jadeja 2
வனத்துறை நடவடிக்கையில் இறங்கியுள்ளனர், மேலும் இந்த சம்பவம்பற்றி விசாரணை செய்ய உத்தரவிட்டுள்ளனர்.
சிங்கத்தின் மீது சவாரி செய்யும்போது ஜடேஜாவுடன் அவரது மனைவியும் இருந்தார். இந்தச் சவாரியின் போது, அவரும் அவரது மனைவியும் வாகனத்தை ஆங்காங்கே நிறுத்தி இறங்கி சிங்கங்களுடன் ஒரு சில படங்களை எடுத்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
சமீபத்தில், ஆபத்தில் தங்கள் உயிர்களை ஆபத்து விளைவிப்பதை தவிர்க்கச் சிங்கங்களுடன் சேர்ந்து செல்ஃபி எடுப்பதை தவிர்க்க வேண்டுமெனச் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களுக்கு வனத்துறை அதிகாரிகள் ஆலோசனை கூறினர்.
jadeja4
“கிர் தேசிய பூங்கா மற்றும் சரணாலயம் (GNPS) ஒரு பாதுகாக்கப்பட்ட காடு, மற்றும் சுற்றுலா பயணிகள் காட்டில் இருக்கும் போது வாகனங்களிலிருந்து கீழே இறங்க அனுமதி இல்லை. ஆனால், கிரிக்கெட் வீரருள்ள புகைப்படங்கள், காட்டினுள் இருந்தபோது வாகனத்திலிருந்து கீழே இறங்கி, சிங்கங்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டது போல், சமூக ஊடகங்களில் வலம் வருகின்றன. சில வனகாவலர்கள் கூட அவருடன் சேர்ந்து புகைப்படங்களில் காணப்படுகிறார்கள்.
jadeja 3
எனவே, நாங்கள் இந்தச் சம்பவம்குறித்து விசாரணை நடத்தி ஒரு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று GNPS கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளோம்,” என்று ஜூனாகத் வனப் பகுதியின், காடுகளின் தலைமை பாதுகாப்பாளரான (CCF) அனிருத் பிரதாப் சிங், இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறினார்.
jadeja 1
ஒரு சவாரியின் போது வாகனத்திலிருந்து இறங்குவதே ஒரு குற்றமாகும் என்றும், இந்தக் கட்டத்தில் ஜடேஜாவிற்கு எதிராக என்ன வழக்குப் போடப்படும் என்று தனக்குத் தெளிவாகத் தெரியவில்லை என்றும் GNPS கண்காணிப்பாளர் ராம் ரத்தன் நளன் கூறினார்.
jadeja 7