திரையுலகிற்கு பல எதார்த்தமான படைப்புகளை தந்தவர் இயக்குனர் செல்வராகவன்.

கடந்த 2011-ம் ஆண்டு செல்வராகவன் கீதாஞ்சலி என்பவரை திருமணம் செய்து கொண்டார். செல்வராகவன் இயக்கிய மயக்கம் என்ன, இரண்டாம் உலகம் படத்தில் கீதாஞ்சலி உதவி இயக்குனராக பணியாற்றிய போது இருவருக்கும் காதல் மலர்ந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த தம்பதிக்கு லீலாவதி மற்றும் ஓம்கார் என இரண்டு அழகான குழந்தைகள் உள்ளது.

இந்நிலையில் அழகான ஆண் குழந்தையை வரவேற்றுள்ளனர் செல்வராகவன் மற்றும் கீதாஞ்சலி தம்பதியினர். செல்வராகவனின் செல்ல மகனுக்கு ரிஷிகேஷ் என்ற பெயர் வைத்துள்ளனர். தாயும் சேயும் நலமாக உள்ளனர். இந்த சுவையூட்டும் செய்தியை கீதாஞ்சலி செல்வராகவன், தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்தார்.