நெல்லை:

ஜினிகாந்த் போன்ற நடிகர்களை இந்திய எல்லைகளை காக்கும் பணிக்கு நரேந்திர மோடி அனுப்ப வேண்டும் என்று இந்திய கம்யூ.,கட்சி மூத்த தலைவர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

நெல்லை சிந்து பூந்துறையில் இ.கம்யூ., பிரச்சார பயண பொதுக் கூட்டம் நடந்தது. அக் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான தா. பாண்டியன் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “ரஜினிகாந்த் வருகிறார் என்றால் கூட்டம் அலைமோதும். அவரும் அவரைப் போன்ற நடிகர்களும் ஒரே அடியில் 20 பேரை வீழ்த்தி விடுவார்கள்.

ஆகவே சீனா, பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற எல்லை பிரச்னை பகுதிகளுக்கும் காஷ்மீருக்கும் ரஜினி போன்ற நடிகர்களை அனுப்பி வையுங்கள். தமிழகத்தில் இன்னமும் சினிமா மாயை மீதான மோகம் குறையவில்லை” என்று தா.பாண்டியன் ஆவேசமாக பேசினார்.

இந்தக்  கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ பழனிச்சாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.