டெல்லி:

மத்திய அரசின் 15-வது தலைமை வக்கீலாக கே.கே.வேணுகோபால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த பதவியில் இருந்த முகுல் ரோத்கி பதவிக்காலம் முடிந்ததை தொடர்ந்து புதிய தலைமை வக்கீலகாக வேணு கோபால் (வயது 86) நியமனம் செய்யப்பட்டுள்ளார். 1970ம் ஆண்டுகளின் இறுதியில் மொரார்ஜி தேசாய் காலத்தில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டவர்.

தலைமை வக்கீலாக நியமிக்கப்பட்ட வேணு கோபால் கேரளாவை சேர்ந்தவர்ர். உச்சநீதிமன்றத்தில் நீண்ட காலமாக வக்கீல் பணியாற்றியவர்.