டில்லி,

ரசியல்வாதிகள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கலாம் என உச்சநீதி மன்றம் யோசனை தெரிவித்துள்ளது.

குற்றப்பின்னணி உடையவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என பா.ஜ.வின் அஸ்வினி உபாத்யாயா என்ற மூத்த வழக்கறிஞர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

அதில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப் பிரிவின் படி குற்றவாளி என்று நிருபிக்கப்பட்ட அரசியல்வாதிகளின் சிறைத் தண்டனை முடிந்த பிறகு, 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படுகிறது. இதை ரத்து செய்து,  குற்றவாளி என்று நிருபிக்கப்பட்டாலே தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கில் நேற்று நடைபெற்ற விசாரணையின்போது,  குற்ற வழக்குகளில் அரசியல்வாதிகள் எத்தனை பேர் தண்டனை பெற்றுள்ளனர் என்பதை தெரிந்து கொள்ள விரும்புவதாக தெரிவித்த நீதிபதிகள், குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற அரசியல்வாதிகளின் பட்டியலை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் விளக்கம் கேட்டு  உத்தரவிட்டிருந்தனர்.

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், நவீன் சின்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்ற வழக்குகளில் அரசியல்வாதிகள் எத்தனை பேர் தண்டனை பெற்றுள்ளனர் என்பதை தெரிந்து கொள்ள விரும்புவதாக தெரிவித்த நீதிபதிகள், குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற அரிசியல்வாதிகளின் பட்டியலை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு  உத்தரவிட்டனர்.

குற்ற வழக்கில் தண்டனை பெற்றவர்களை அரசியலில் இருந்து ஆயுள் முழுக்க தகுதி நீக்கம் செய்வது குறித்து மத்திய அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

விசாணையின்போது, தேர்தல் ஆணையம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில்,  குற்றப்பின்னணி உடையவர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கு வாழ் நாள் தடை விதிக்கலாம் என்றும், அவர்களுக்கு  வாழ்நாள் தடை விதித்தால் மட்டும் குற்றச்செயல்களை தடுக்க முடியும் என்று கூறி உள்ளது.

வேட்புமனுத் தாக்கலின் போது தாக்கல் செய்த ஆவணங்கள் மூலம் நாட்டில் இப்போது எம்.பி., எம்எல்ஏக்களாக இருப்பவர்கள் மீது 1,581 வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், கடந்த ஓராண்டில் இதில் எத்தனை வழக்குகளில் இருந்து எம்.பி., எம்எல்ஏக்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். எத்தனை வழக்குகளில் அவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்ற விவரத்தை மத்திய அரசு நீதி மன்றத்தில் 6 வாரத்தில் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

மேலும், அரசியல்வாதிகள் மீதான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்து விசாரணை செய்யலாம்  என்று அரசுக்கு யோசனை தெரிவித்தனர். பின்னர் வழக்கை  டிசம்பர் 13-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.