சென்னை,

திமுக தலைமையகத்தில் இன்று நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,  அதிமுகவுக்கு என தனி தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள் தொடங்கப்படும் என கூறினார்.

நமது அம்மா என்ற பெயரில் நாளிதழும், அம்மா டிவி என்ற பெயரில் தொலைக்காட்சியும் தொடங்க இருப்பதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அரசியல் கட்சியினர் ஒவ்வொருவரும் தங்களுக்கு என தனி டிவி சேனல், பத்திரிகைகள் வைத்து நடத்தி வருகின்றனர்.  இந்நிலையில், அதிமுகவுக்கு ஆதரவாக இருந்து வந்த ஜெயா டிவி, ஜெயலலிதா மரணத்தை தொடர்ந்து சசிகலா தரப்பினர் கைவசம் சென்றுவிட்டது. இதன் கார

தற்போது அதிமுகவில் சசிகலா குடும்பத்தினர் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக மற்றும் அரசு குறித்த செய்திகள் ஜெயா டிவியிலும், நமது எம்எல்ஜிஆர் பத்திரிகைகளிளும் வருவதில்லை.

இதன் காரணமாக கட்சி மற்றும் ஆட்சி குறித்த நிகழ்வுகள் மற்றும் செய்திகளை கடைக்கோடி மக்களுக்கும் தெரியப்படுத்தும் வகையில்,  அதிமுகவுக்கு என தனி தொலைக்காட்சி மற்றும் தனி செய்தித்தாளை தொடங்க அதிமுக தலைமை முடிவு செய்துள்ளது.

இதை உறுதி செய்யும் வகையில் இன்று நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். அதற்கான பணிகள் நடைபெற்று வருதாகவும் விரைவில் டிவி சேனல் மற்றும் பத்திரிகை தொடங்க்ப்படும் என்றும் முதல்வர் கூறி உள்ளார்.

அதிமுக சார்பில் தொடங்கப்படவுள்ள நாளிதழுக்கு ‘நமது அம்மா’ என பெயரிடப்படவுள்ளது. தொலைக்காட்சிக்கு ‘அம்மா டிவி’ என்று பெயர் வைக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

நமது அம்மா பத்திரிகைக்கு ஏற்கனவே நமது எம்ஜிஆரில் ஆசிரியராக பதவி வகித்து வந்த மருது அழகுராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.