சென்னை:
தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக் கூட்டம் வரும் 16-ஆம் தேதி மாலை நடைபெறும் என்று திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்து உள்ளார்.
இது தொடர்பாக தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையில் உயர்நிலை செயல் திட்டக் கூட்டம் வரும் 16-ஆம் தேதி மாலை 5 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என்று தெரிவித்து உள்ளார்.
இந்த கூட்டத்தில் உயர்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.