டெல்லி: நாடு முழுவதும் உள்ள சட்டப்பல்கலைகழகங்களில்  மாணவர் சேர்க்கைக்காக கிளாட் தேர்வு Common Law Admission Test (CLAT 2020)  செப்டம்பர் 7 -ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப் பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் 22 சட்டப் பல்கலைக்கழகங்கள் உள்ளது. இங்கு B.A., LL.B (Hons) மற்றும் B.Com., LL.B (Hons) ஆகிய ஐந்து வருட இளநிலைப் பட்டப்படிப்புகளிலும்,  LL.M எனும் ஒரு வருட முதுநிலைப் பட்டப்படிப்பிலும் சேருவதற்கு பொதுச் சட்டச் சேர்க்கைத் தேர்வு நடைபெறும்.

இந்த, கிளாட் தேர்வு  மே 10-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் ஆகஸ்டு 22ந்தேதி ஆன்லைன் மூலம் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், பல மாநிலங்களில் தொற்று குறையாத நிலையில்,  அனைத்து மாணவர்களும் தேர்வை பாதுகாப்பாக எழுத முடியுமா என்பது கேள்விக்குறியானது. இதையடுத்து, CLAT 2020 தேர்வு காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக தேசிய சட்ட பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு சமீபத்தில் அறிவித்தது.

இந்த நிலையில், தற்போது, செப்டம்பர் 7 -ஆம் தேதி பிற்பகல் 2:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு நடத்தப்படும் என்று NLU கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

இதற்கான அட்மிட் கார்டுகள் இரண்டு வாரத்தில் என்.எல்.யூ கூட்டமைப்பு https://consortiumofnlus.ac.in/  என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

நாடு முழுவதும் Common Law Admission Test (CLAT 2020) தேர்வை   மொத்தம் 70,000 மாணவர்கள் தேர்வு எழுத்தவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.