டில்லி

இந்தியாவுக்கு 4 நாள் சுற்றுப்பயணமாக செர்பிய நாட்டின் துணை பிரதமர் வந்துள்ளார்,

செர்பிய குடியரசு நாட்டின் துணை பிரதமராக பதவி வகிப்பவர் இலிகா டேசிக்.   இவர் வெளிவிவகாரத் துறை அமைச்சராகவும்  உள்ளவர் ஆவார்.   இவர் இந்தியாவுக்கு 4 நாள் சுற்றுப்பயணமாக வந்துள்ளார்.  டில்லி சர்வதேச விமான நிலையத்தில் இந்திய அரசின் உயர் அதிகாரிகள் வரவேற்றனர்.

நாளை அவர் ஆக்ரா செல்ல இருக்கிறார்.  மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுடன் நாளை மறுநாள் சந்திப்பு ஒன்றை நிகழ்த்துகிறார்.   அத்துடன் அன்று மாலை 3 மணிக்கு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொள்ளும் இலிகா டேசிக்  சிறப்புரை நிகழ்த்த உள்ளார்.