ரோம்: இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்பதில்லை என்று அறிவித்துள்ளார் செரினா வில்லியம்ஸ்.

இத்தாலி ஓபன் டென்னிஸ் இம்மாதம் 14ம் தேதி தொடங்குகிறது. இதில், செரினா பங்கேற்பார் என்றுதான் கூறப்பட்டிருந்தது. ஆனால், சமீபத்தில் அமெரிக்க ஓபன் போட்டியில் இவர் பங்கேற்றபோது, இவரது குதிகாலில் பிரச்சினை ஏற்பட்டு, அதனால் தோல்வியடைந்தார்.

எனவே, பிரெஞ்சு ஓபன் தொடருக்கு பயிற்சியாக அமையக்கூடிய இத்தாலி ஓபன் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இவரைப்போலவே, ஆஸ்திரியாவின் டொமினிக் தியம், ஜெர்மனியின் அலெக்ஸழண்டர் ஸ்வெரேவ் மற்றும் ரஷ்யாவின் டேனில் மெட்வேடேவ் ஆகியோரும் இத்தொடரிலிருந்து விலகியுள்ளனர்.