“ஸீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா” தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா, 1 பில்லியன் டோஸ்கள் தடுப்பு மருந்து தயாரித்து வழங்குவதற்காக அஸ்ட்ராஜெனிகாவுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளார்.

COVID-19 க்கான ஆக்ஸ்போர்டு தடுப்பு மருந்தைத் தயாரிப்பதற்காக அஸ்ட்ராஜெனிகாவுடன் கூட்டு சேர்ந்துள்ள ஸீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (SII), ‘Covidshield’ – எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த சாத்தியமான தடுப்பு மருந்தின் 2/3-ஆம் கட்ட மனித மருத்துவ பரிசோதனைகளை நடத்துவதற்கு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஜெனரலின் (டி.சி.ஜி.ஐ) அனுமதி கோரியுள்ளது. இதை டி.சி.ஜி.ஐ.க்கு வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.
“விண்ணப்பத்தின்படி, ஆரோக்கியமான இந்தியகளுக்கு ‘கோவிஷீல்ட்’ (COVID-19) இன் பாதுகாப்பு மற்றும் நோயெதிர்ப்புத் தன்மையைக் கண்டறிய கட்டுப்பாட்டு ஒப்பீட்டு குழுவுடன் சேர்ந்த ஒரு ஆய்வை இது மேற்கொள்ளும். 18 வயதுக்கும் மேற்பட்ட சுமார் 1,600 பேர் இதில் பங்கேற்ப்பார்கள் என்று கூறப்படுகிறது. இங்கிலாந்தில் ஐந்து சோதனை தளங்களில் நடத்தப்பட்ட தடுப்பூசியின் முதல் இரண்டு கட்ட சோதனைகளின் ஆரம்ப முடிவுகள், இது ஏற்றுக்கொள்ளக்கூடிய பாதுகாப்புத் தன்மையைக் கொண்டிருப்பதைக் காட்டியது மற்றும் ஆன்டிபாடி வழி நோயெதிர்ப்பு செயல்பாடுகள் தூண்டப்பட்டன.

இந்த தடுப்பு மருந்தை அறிமுகப்படுத்த,  உலகின் மிகப்பெரிய தடுப்பு மருந்து தயாரிப்பாளரான எஸ்ஐஐ, ஜென்னர் நிறுவனம் (ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்) உருவாக்கிய சாத்தியமான தடுப்பூசியை, பிரிட்டிஷ்-ஸ்வீடிஷ் மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனிகாவுடன் இணைந்து தயாரிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

அஸ்ட்ராஜெனிகாவுடனான ஒப்பந்தம் குறித்து, ஸீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா, “ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்டு வரும் கோவிட் -19 தடுப்பூசியின் 1 பில்லியன் அளவை உற்பத்தி செய்து வழங்குவதற்காக ஸீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா அஸ்ட்ராஜெனிகாவுடன் ஒரு உற்பத்தி ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது,” என்று கூறியிருந்தார்.

இந்த மருந்துகள் இந்தியா மற்றும் உலகெங்கிலும் உள்ள நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கானதாக (GAVI நாடுகள்) இருக்கும் என்று அவர் கூறினார். 2 மற்றும் 3 – ஆம் கட்ட மனித சோதனைகளை இந்தியாவில் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கடந்த திங்களன்று தடுப்பு மருந்தின் திருப்திகரமான செயல்பாடுகளை அறிவித்தது. இது உலகம் முழுவதும் உருவாக்கப்பட்டு வரும் பல தடுப்பு மருந்துகளில் முன்னணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது. லான்செட்டில் வெளியிடப்பட்டுள்ள ஒரு அறிக்கையின்படி, இதன் ஆரம்பகட்ட சோதனை முடிவுகள் இந்த தடுப்பு மருந்து பாதுகாப்பானது என்பதையும் சிறந்த நோயெதிர்ப்பு சக்தியைத் தூண்டுகிறது என்பதையும் நிறுவியுள்ளது.
Thank you: OutLook India