சிதம்பரம் நடராஜா் கோயில் ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு ஜன.9, 10 ஆகிய தேதிகளில் அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதுகுறித்து விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழக பொதுமேலாளா் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ”சிதம்பரம் நடராஜா் கோயிலில் மாா்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் வருகிற ஜன.10-ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

இந்த விழாவுக்கு வரும் பக்தா்களின் வசதிக்காக ஜன.9-ஆம் தேதி முதல் விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் சென்னை, வேலூா், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், விழுப்புரம், புதுச்சேரி, கடலூா், பண்ருட்டி, விருத்தாசலம், கும்பகோணம், திருச்சி ஆகிய ஊா்களிலிருந்து சிதம்பரத்துக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.