டெல்லி: அமெரிக்க உள்பட சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசியை பெற வேண்டும் என இந்திய வம்சாவளியைச் சேர்ந்த  அமெரிக்க மருத்துவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி எடுக்க வேண்டியது கட்டாயம் இல்லை என்றும், விருப்பமுள்ளவர்கள் மட்டுடே எடுத்துக்கொள்ளலாம் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில்,ல இந்திய-அமெரிக்க மருத்துவர்கள் கோரோனா தடுப்பூசிகளை இந்திய மக்களை அனைவரும் எடுத்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள  அமெரிக்க வம்சாவளியைச் சேர்ந்த மருத்துவர்கள் சங்கத்தின் (ஏஏபிஐ) முன்னாள் தலைவர் டாக்டர் சுரேஷ் ரெட்டி,  அமெரிக்கா  ஒரு வாரத்திற்கு முன்பு தடுப்பூசிகளை வழங்கத் தொடங்கியது.  ஃபைசர்-பயோஎன்டெக் மற்றும் மாடர்னா நிறுவன தடுப்பூசிகளுக்கு  ளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. தற்போதைய நிலையில், கொரோனா தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி மட்டுமே உள்ளது. கொரோனாவுக்கு எதிரான உலக போரில், இந்த தடுப்பூசி நம்மை  சேமிக்கும்,  இது விஞ்ஞான உலகின்  ஆசீர்வாதம் என்று தெரிவித்திருப்பதுடன், . நாம் அனைவரும் தடுப்பூசி எடுக்க வேண்டும். இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்,

கொரோனா தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தின் முன்னணியில் பல இந்திய-அமெரிக்க மருத்துவர்கள் பகிரங்கமாக கொரோனா வைரஸ் தடுப்பூசியை எடுத்து வருகின்றனர். மேலும், அவர்கள்  மற்றவர்களையும் தடுப்பூசி பெற வேண்டும் ஊக்குவித்து வருகின்றனர்.  இந்த தடுப்பூசியால்,  நல்ல முடிவுகளையும் நாங்கள் காண்கிறோம். இந்த தடுப்பூசி இப்போது நம்மிடம் உள்ள ஒரே சேமிப்புக் கருணை, அதை நாம் எடுக்க வேண்டும்  என்று வலியுறுத்தி உள்ளார்.