சென்னை: பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில், திமுக ஆட்சி பதவி ஏற்றதும்  அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும்  என திமுக எம்எல்ஏவும், இளைஞரணி தலைவருமான  உதயநிதி ஸ்டாலின்  தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றியுள்ள திமுக, வரும் 7ந்தேதி பதவி ஏற்கிறது. மாநில முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்கிறார். அவருடன் அமைச்சர்களும் பதவி ஏற்க உள்ளனர்.   அமைச்சரவையில்,   அவருடன் பிற அமைச்சர்களும் பதவி ஏற்பார்கள் எனறு எதிர்பார்க்கப்படும் நிலையில், உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படும் என தகவல்கள் பரவி வருகின்றன.

திமுக இளைஞரணி செயலாளராக உள்ள உதயநிதி ஸ்டாலின்,  சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் முதன்முதலாக போட்டியிட்டு  பெருவாரியான வாக்கு விதிதியாசத்தில்  பெற்று அசத்தியுள்ளார். நடந்து முடிந்த தேர்தலில் அவர் மொத்தம் 91,776 வாக்குகள் பெற்றுள்ளார்.  தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் கசாலியை விட 68,133 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி வாகை சூடினார்.

இதைத்தொடர்ந்து,  சென்னை  புதுப்பேட்டை பகுதியில், கொரோனா நலத்திட்ட உதவிகளை வழங்கிய மு.க.ஸ்டாலின் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,

எனக்கு கிடைத்து இருக்கக்கூடிய வெற்றி திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கிடைத்த வெற்றி என்றும் தன்னுடைய தாத்தா கருணாநிதிக்கு கிடைத்த வெற்றி என நெகிழ்ச்சியாக பேசினார். தனக்கு அமைச்சர் பதவி கிடைக்குமா என்பது குறித்து,  “இன்னும் 4 நாட்களில் தெரிந்து விடும்” என்று பதிலளித்தார்.

அவரிடம் செய்தியளார்கள்,  பொள்ளாச்சி விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினர், அதற்கு பதில் கூறிய உதயநிதி,  “பதவி ஏற்ற பிறகு அதிரடி நடவடிக்கைகள் இருக்கும்” என்று கூறினார்.