சண்டிகர்:

லாத்கார சாமியார் குர்மீத் ராம் செக்ஸ் அடிமை என்று அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். இதன் காரணமாக குர்மித்ராம் மீதான குற்றச்சாட்டு மீண்டும் உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தனது பெண் சீடர்களை பாலியல் பலாத்காரம்  செய்து வந்ததாக, முன்னாள் பெண் சீடர் ஒருவர் சாமியார்மீது வழக்கு பதிவு செய்து, அந்த  குற்றம் நிரூபிக்கப்பட்டு,  பல ஆண்டுகாலமாக விசாரணை செய்யப்பட்டு வந்த வழக்கில், சமீபத்தில், அவர்  குற்றவாளி என அரியான நீதி மன்றத்தால் அறிவிக்கப்பட்டு, அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து போலீசார் அவரை சிறைச்சாலையில் அடைத்தனர். அதையடுத்து, அவரது தேரா சச்சா ஆசிரமத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் குறித்து தினசரி ஒவ்வொரு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

பலாத்கார சாமியாரான குர்மீத் ராம் தனது ஆசிரமத்தில் உள்ள பெண் சீடர்களை வலுக்கட்டாய மாக பாலியல் பலாத்காரம் செய்து வந்ததும், இதற்காக அவரது படுக்கை அறையில் இருந்து, பெண் சீடர்கள் தங்கியிருக்கும் பகுதிக்கு சென்றுவர சுரங்க பாதை இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்ட பாலியல் சாமியார் குர்மித் ராம் ரஹீம் ஒரு செக்ஸ் அடிமை என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

சிறையில் நடைபெற்ற மருத்துவ பரிசோதனையின்போது, சாமியார் செக்ஸ் அடிமை என்பது பரிசோதனை மூலம் தெரிய வந்துள்ளதாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கூறி உள்ளனர்.

இதன் காரணமாக சாமியார் இளம்பெண்களிடம் தொடர்ந்து பாலியல் வன்புணர்வு செய்து வந்துள்ளது மீண்டும் உறுதியாகி உள்ளது.