கர்நாடக அமைச்சர் ரமேஷ் ஜர்கிகோலி, பெண் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

அமைச்சர் பதவியில் இருந்து அவர் ராஜினாமா செய்துள்ளார். “நான் எந்த தவறும் செய்யவில்லை” என அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அவரது பதவி விலகல் கர்நாடக மாநிலத்தில் உள்ள மற்ற அமைச்சர்களுக்கு கிலியை உருவாக்கி உள்ளது.

6 அமைச்சர்கள் “தங்களை பற்றி ஊடகங்கள் தவறாக செய்தி வெளியிடக்கூடாது” என நீதிமன்றத்தை அணுகினர்.

6 அமைச்சர்கள் குறித்து செய்தி வெளியிட நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

அவர்களில் ஒருவரான சட்டத்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை “கர்நாடக மாநிலத்தில் அரசியல் ஸ்திரத்தன்மையை குலைக்க சதி நடக்கிறது” என குற்றம் சாட்டியுள்ளார்.

இதனிடையே மேலும் சில அமைச்சர்களும், நீதிமன்றத்தை அணுகி, தங்களை பற்றி ஊடகங்கள் அவதூறு செய்தி வெளியிட தடை கோர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

– பா. பாரதி