தூத்துக்குடி:
மீபத்தில் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட, பாராளுமன்ற மேலவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவின் கணவர் மற்றும் மகன் மீது  இரு பெண்கள் பாலியல் புகார் அளித்துள்ளனர்.
சமீபத்தில் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார் பாராளுமன்ற மேலவை உறுப்பினர் சசிகலா புஷ்பா. தமிழக முதல்வரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா தன்னை அறைந்ததாகவும், ராஜினாமா செய்யச்சொல்லி வற்புறுத்தியதாகவும் ராஜ்யசபையிலேயே சசிகலா புஷ்பு புகார் கூறினார். தமிழகத்துக்குச் செல்ல பயமாக இருக்கிறது என்றார்.

தனது சகோதரி ஜான்சிராணியுடன் புகார் கொடுக்க வந்த பானுமதி
தனது சகோதரி ஜான்சிராணியுடன் புகார் கொடுக்க வந்த பானுமதி

இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் உள்ள சசிகலா புஷ்பாவின் வீடு மர்ம நபர்களால் தாக்கப்பட்டது.  இதற்கிடையே, சசிகாலா புஷ்பா 20 லட்ச ரூபாய் மோசடி செய்துவிட்டதாக நெல்லை எஸ்.பி.யிடம், ராஜேஷ் என்ற காண்டிராக்டர் புகார் கொடுத்தார்.
இந்த நிலையில் இன்று, பானுமதி, ஜான்சிராணி   ஆகிய இரு பெண்கள் தூத்துக்குடி எஸ்.பியிடம் புகார் மனு ஒன்றை அளித்தார்கள்.
அதில், தான் சசிகலா புஷ்பா வீட்டில் வேலை பார்த்ததாகவும்,  சசிகலா புஷ்பா தன்னை கடுமையாக அடித்து சித்திரவதை செய்ததாகவும் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் சசிகலா புஷ்பாவின் கணவர் மற்றும் மகன் தனக்கு பாலியல் ரீதியான தொந்தரவுகள் செய்ததாகவும் அவர்கள் அனைவர் மீதும்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.