கத்தி முனையில் பெண், பாலாத்காரம் செய்யப்பட்டது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை சோழிங்கநல்லூர் கலைஞர் கருணாநிதி சாலை அருகே, கிராம நெடுஞ்சாலை பகுதியில் வசித்து வருபவர் நர்சத் அக்தர் (வயது 25). திரிபுராவை சேர்ந்த இவர் சோழிங்கநல்லூரில் ஒரு ஐடி நிறுவனத்தில் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்து வருகிறார். இவர் சமீபத்தில் நர்கிஷ் (வயது 20) என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.

இவருக்கு ஏற்கெனவே திருமணமாகி முதல் மனைவி திரிபுராவில் இருக்கிறார். அவருக்கு தனது கணவரின் இரண்டாவது திருமணம் குறித்து தெரியவந்தது.

இதனால் ஆத்திரமடைந்த அவர், தனது கணவரின் இரண்டாவது மனைவியான நர்கிஷை கொலை செய்ய திட்டமிட்டார்.

இதற்காக தனது நண்பரான திரிபுராவை சேர்ந்த ஷாகிர் உசைன் (வயது 26) என்பரிடம் 50,000 ரூபாய் பணம் கொடுத்து கொலை செய்ய கூறியிருக்கிறார்.

அதே  போல, நர்கிஷை கொலை செய்ய ஷாகிர் உசைன் அவரது வீட்டுக்குச் சென்றிருக்கிறார்.  . ஆனால் நர்கிசின் அழகில் மயங்கிய அவர், கத்தி முனையில் நர்கிசை மிரட்டி பலாத்காரப்படுத்திவிட்டுச் சென்றுவிட்டார்.

இதனால்  வீட்டில் கண்ணீர் மல்க அழுது கொண்டிருந்த நர்ஷித் கணவரிடம் நடந்தவற்றைக் தெரிவித்தார்.

இதுதொடர்பாக செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காரப்பாக்கத்தில் பதுங்கியிருந்த ஷாகிர் உசைனை காவல் துறையினர் கைது செய்தனர்.