சேலம்:

சேலம் அருகே உள்ள கிச்சிப்பாளையத்தில்16 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த 2 பேர் போக்ஸோ சட்டத்தின்படி கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் சிறுமிகள் மீதான பாலியன் வன்கொடுமைகள் அதிகரித்து வரும் நிலையில், சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கும் வகையில் சட்ட சட்டத்தை நேற்று முன்தினம் மத்திய அரசு அமல்படுத்தி உள்ளது.

இந்நிலையில், சேலம் அருகே 16 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த 2 பேரை போலீசார் போஸ்கோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

சேலம்  ஜங்ஷன் ரெயில் நிலையம் அருகே உள்ள  புதுரோடு பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை, சேலம் கிச்சிப்பாளையத்தை சேர்ந்த இம்ரான் மற்றும் அவரது நண்பரான அரிசிப்பாளையத்தை சேர்ந்த சீனிவாசன் ஆகியோர், காரில் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த சூரமங்கலம் மகளிர் காவல்நிலைய போலீசார், சீனிவாசன், இம்ரான், ஆகியோரை போஸகோ சட்டத்தின் கீழ் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

சிறுமியை கடத்த பயன்படுத்தப்பட்ட காரும், சீனிவாசனின் ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டது. தற்போது போக்ஸோ சட்டத்தில் தூக்குதணடனை விதிக்கும் வகையில் திருத்தப்பட்ட சட்டம் அமல்படுத்தப்பட்ட நிலையில், சேலத்தில் முதன்முதலாக 2 பேர் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.