சென்னை: ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகாரை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி டி.ஜி.பி. திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

முதல்வர் பாதுகாப்பு பணியின்போது, சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் தவறாக நடக்க முயன்றதாக, பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவர் உள்துறைச் செயலாளர், சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி. திரிபாதி ஆகியோரிடம் புகார் அளித்திருந்தார். இதையடுத்து ராஜேஷ் தாஸ் தமிழக அரசால் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.

அவர் மீதான புகாரை விசாரிக்க, கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் 6 பேர் கொண்ட குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. விசாரணை குழுவில், சீமா அகர்வால், அருண், சாமுண்டீஸ்வரி, வி.கே.ரமேஷ் பாபு, லொரேட்டா ஜோனா ஆகிய அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.

இந் நிலையில் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி அளித்த புகாரை விசாரிக்குமாறு சி.பி.சி.ஐ.டி.க்கு தமிழக சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி. திரிபாதி அனுப்பியுள்ளார். இதையடுத்து இந்த புகாரைப் பெற்ற சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர்.