திருவனந்தபுரம்:

கேரளா மாநிலம் காசர்கோடு மாவட்டத்ம் நீலேஸ்வரத்தை சேர்ந்த நடிகை சனுஷா என்பவர் தமிழில் வினயன் இயக்கிய ‘நாளை நமதே’ படத்தில் நடித்தார். மிஸ்டர் மருமகன் என்ற மலையாள படத்திலும் நடித்துள்ளார். இது தவிர ரேணிகுண்டா, பீமா, அலெக்ஸ் பாண்டியன் உள்ளிட்ட பல தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.

கேரளா மாநிலம் கன்னூரில் இருந்து திருவனந்தபுரம் சென்ற விரைவு ரெயிலில் சனுஷா பயணம் செய்தார். அப்போது அதே ரெயில் பயணம் செய்த தமிழகத்தை சேர்ந்த ஆண்டோ போஸ் என்பவர் அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சனுஷா டிக்கெட் பரிசோதகரிடம் புகார் அளித்தார்.

தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து ஆண்டோ போஸை கைது செய்தனர். ஆபாசமாக பேசியதாக நடிகை அமலாபால் அளித்த புகாரின் பேரில் தொழிலதிபர் அழகேசன் நேற்று கைது செய்யப்பட்டார். இந்நிலையில் மற்றொரு நடிகைக்கு பாலியன் தொந்தரவு கொடுத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.