சென்னை:

பாலியல் தொல்லை தொடர்பாக அனைத்து இந்திய இந்துமகாசபை தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீகந்தன் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் காவி புரட்சியாளர் அமைப்பினர் தேசியத்தலைவராகவும் இருந்து வருகிறார்.

கடந்த ஜனவரி மாதம் ஸ்ரீகந்தன்மீது பெண் ஒருவர் கீழ்ப்பாக்கம் பெண்கள் காவல்நிலையத்தில், தன்னை பாலியல்  தொல்லை கொடுத்ததாக ஸ்ரீகந்தன்மீது புகார் கொடுத்திருந்தார். இதையடுத்து, அவர்மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து ஸ்ரீகந்தன் தலைமறைவானார்.

கடந்த 2 மாதங்களாக காவல்துறையினர்  ஸ்ரீ கந்தனை தேடிவந்த நிலையில், தற்போது  கைது செய்யப்பட்டு இருப்பதாக காவல்துறை தெரிவித்து உள்ளது. அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.