69 வயதான பாலிவுட் நடிகை ஷபானா ஆஸ்மி நேற்று சனிக்கிழமை மகாராஷ்டிரா ராய்காட் மாவட்டத்தில் இருந்து மும்பை – புனே விரைவு சாலையில் காரில் பயணம் செய்துக்கொண்டு இருந்தார். அப்போது காலாப்பூர் பகுதியில் லாரி ஒன்றின் மீது மோதி விபத்திற்குள்ளானது.

தலையில் காயங்கள், கழுத்து, வாய் முதுகெலும்பு, முகம் மற்றும் வலது கண் உள்ளிட்ட பல இடங்களில் அவருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தற்போது ஷபனா ஆஸ்மியின் உல்ட நிலை சீராக உள்ளதால் மும்பை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார் .அனில் கபூர், தபு மற்றும் அனில் அம்பானி உட்பட பல பாலிவுட் பிரபலங்கள் அவரை சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர் .

கார் டிரைவர் அம்லேஷ் காமத் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. கலபூரில் பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆரில், மும்பை-புனே அதிவேக நெடுஞ்சாலையில் ஓடிய லாரி மீது கார் மோதியதாக டிரக் டிரைவர் சார்பாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. எஃப்.ஐ.ஆர் படி, கார் ஓட்டுநரின் அலட்சியம் தான் விபத்துக்கு காரணம் எனத் தெரிகிறது.