தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் தேர்தல் கடந்த ஞாயிற்று கிழமை நடந்தது. பாண்டவர் அணி மற்றும் சுவாமி சங்கரதாஸ் அணி என இரண்டு அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி நடைபெற்றது.

தேர்தல் தேதி இடம் முடிவானதும் பலர் விஷாலுக்கு ட்விட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்தனர். இதை கண்ட சாந்தனு

“ட்விட்டரில் இருக்கும் செல்வாக்கை வைத்து சிலர் ஓட்டு கேட்பது விசித்திரமாக உள்ளது. தேர்தல் என்ற பெயரில் எவ்வளவு முட்டாள்தனம் நடக்கிறது என்பதற்கு நடிகர் சங்கத் தேர்தலே சாட்சி என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். “பாக்யராஜ் யாரு? நடிகரா?” என்று ஒருசிலரை விட்டு கேட்பதெல்லாம் அருவருப்பாக இருக்கிறது.

உங்களுக்கு வேண்டுமென்றால் நீங்களே முன்னால் வந்து கேள்வி கேட்க வேண்டும் என்று விரும்புகிறேன். மக்கள் இதைப் பற்றி எல்லாம் கவலைப்பட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள். இதை விட பெரிய பிரச்சினைகள் எல்லாம் சமுதாயத்தில் இருக்கிறது. நாம் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் உங்கள் வேலையைத் தான் செய்கிறீர்கள்” என்று சாந்தனு.பதில் பதிவில்தெரிவித்துள்ளார்.