புனே: இறுதி ஒருநாள் போட்டியில், இந்திய அணியை மிரட்டி வந்த இங்கிலாந்து பேட்டிங் ஜோடியைப் பிரித்தார் ஷர்துல் தாகுர்.

இங்கிலாந்து அணி 95 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில், டாவிட் மாலனும், லியம் லிவிங்ஸ்டோனும் இணைந்து மிரட்டலாக ஆடினர். கிட்டத்தட்ட 70 ரன்கள் வரை அவர்கள் ஜோடி சேர்ந்து அடித்தனர்.

இதனையடுத்து, இந்த ஜோடியை பிரித்தே ஆக வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு ஏற்பட்டது. இந்நிலையில், அருமையாக பந்துவீசிய ஷர்துல், லிவிங்ஸ்டோனை முதலில் பெவிலியன் அனுப்பினார். பின்னர், சிறிதுநேரத்திலேயே, அரைசதம் அடித்த மாலனையும் அவுட்டாக்கினார் ஷர்துல் தாகுர்.

இதனால், இங்கிலாந்து அணி கடும் நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ளது. அந்த அணியின் வெற்றிக் கனவு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது என்றே கூறலாம். பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்ட ஷர்துல், தற்போது பெளலிங்கிலும் அசத்தி வருகிறார். அவர் இதுவரை 3 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்.

அதேசமயம், பிரசித் கிருஷ்ணாவின் பந்துவீச்சு தற்போதுவரை சுத்தமாக எடுபடவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.