துபாய்: பாலிவுட் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான ஷாருக்கானின் 54வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரை சிறப்பிக்கும் விதமாக, துபாயிலுள்ள உலகின் உயரமான புகழ்பெற்ற புர்ஜ் கலிபா கட்டடத்தில் அவரின் பெயர் எழுதப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; ஷாருக்கானின் பிறந்தநாளை உலகெங்கிலுமுள்ள அவரின் ரசிகர்கள் கொண்டாடிய நிலையில், துபாயின் புகழ்பெற்ற புர்ஜ் கலிபா கட்டடத்திலும், பிறந்தநாள் வாழ்த்துக்களுடன் அவரின் பெயர் எழுதப்பட்டிருந்துது.

‘Happy Birthday….King of Bollywood’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது அங்கே. இதனால் அகம் மகிழ்ந்துபோன ஷாருக்கான், அந்தக் கட்டடத்தின் வீடியோவை தனது டிவிட்டர் மற்றும் இன்ஸ்ட்டாகிராம் பக்கங்களில் வெளியிட்டு மகிழ்ந்துள்ளார்.

மேலும், “உலகின் உயரமான இடத்தில் என்னை ஜொலிக்க வைத்ததற்கு நன்றி. உங்களின் அன்பும் பாசமும் என்ன‍ை மெய்சிலிர்க்க வைக்கிறது. ஐ லவ் யூ துபாய்” என்று குறிப்பிட்டுள்ளார் அவர்.

இப்படி அவரின் பெயர் ஒளிர்ந்த நிலையில், அவர் நடித்த ‘ஓம் சாந்தி ஓம்’ படத்தின் பாடலும் பின்னணியில் ஒலித்தது. பலர் இக்காட்சியை வீடியோ எடுத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.