ண்டன்

ர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இந்தியரான சஷாங்க் மனோகர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவை சேர்ந்த சஷாங்க் மனோகர் கடந்த 2016ஆம் வருடம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகினார்.   அதற்குப் பின் இரு தினங்களில் அவர் சர்வதேச கிரிக்கெட் வாரியத் தலைவராக போட்டி இன்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.   அவர் அடுத்த இரு வருடங்களுக்கு தலைவராக பதவியில் இருப்பார் என சொல்லப்பட்டது.

கடந்த வருடம் மார்ச் மாதம் சொந்தக் காரணங்களுக்காக தனது பதவியை சஷாங்க் மனோகர் ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.   சென்ற வருடம் ஜூன் மாதம் வரை  மட்டுமே பதவியில் இருக்கப் போவதாக அவர் அறிவித்தும் வாரிய நிர்வாகம் அவரே தலைமை பொறுப்பில் நீடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டது.

வாரிய உறுப்பினர்களும் அதையே விரும்பியதால் அவர் 2018 ஜூன் வரை பதவியில் நீடிக்க ஒப்புக் கொண்டார்.   இன்று மீண்டும் சஷாங்க் மனோகர் சரவதேச கிரிக்கெட் வாரியத் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப் பட்டதாக வாரியம் அறிவித்துள்ளது.