1
மகாராஷ்டிராவில் உள்ள ஷிர்டி சாய்பாபா கோயிலுக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் வரும் ஜனவரி 1ம் தேதியில் இருந்து ஓராண்டு காலத்துக்கு இலவச  உணவு அளிக்கபப்டும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
2
தற்போது கோயிலில் சாப்பாடு ஒன்றுக்கு ரூ.10 வசூலிக்கப்படுகிறது.  ஏற்கெனவே,   சாய்பாபாவை தரிசிப்பதற்காக வரிசையில் நிற்கும் பக்தர்களுக்கு டீ, காபி, பால், பிஸ்கட் மற்றும் மினரல் வாட்டர் ஆகியவை இலவசமாக கொடுக்கபடுவது குறிப்பிடத்தக்கது.