மும்பை: விவசாயிகளுக்கு ஆதரவளிக்க வேண்டியது நமது கடமை என்று சிவசேனா எம்பி சஞ்சய் ரவுத் கூறி உள்ளார்.

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள்  13 நாள்களாக போராடி வருகின்றனர். மத்திய அமைச்சர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

இந் நிலையில் விவசாயிகளின் இன்றைய முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்த சிவசேனா கட்சி எம்பி சஞ்சய் ரவுத், விவசாயிகளுக்கு ஆதரவளிக்க வேண்டியது நமது கடமை என்றார்.

தொடர்ந்து அவர் கூறியதாவது: அரசுக்கு இதயம் என்று ஒன்று இருந்தால் உள்துறை அமைச்சராக இருந்தாலும் சரி, பிரதமராக இருந்தாலும் சரி, அவர்களே விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்.

இங்கு நடைபெறுவது அரசியலுக்கான முழு அடைப்பு கிடையாது. எங்கள் அனைவரின் உணர்வு. போராடும் விவசாயிகள் அரசியல் கொடியை பிடித்து நிற்கவில்லை. அவர்களோடு ஒற்றுமையுடனும், உணர்வுகளுடனும் இணைந்து நிற்பது கடமை. இதில் அரசியல் இல்லை. இருக்கவும் கூடாது என்று கூறினார்.