மும்பை: மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில், ஆல்ரவுண்டர் ஷவம் துபே முதன்முறையாக வாய்ப்புப் பெற்றுள்ளார்.

மேலும், 2 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர், டி-20 போட்டிக்காக வேகப்பந்து புயல் முகமது ஷமியும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி-20 போட்டிகளில் பங்கேற்க மேற்கிந்திய அணி இந்தியா வந்துள்ளது. இதில் பங்கேற்பதற்கான இந்திய அணி விபரம் அறிவிக்கப்பட்டது.

டி-20 போட்டிகளைப் பொறுத்தவரை, கேப்டன் விராத் கோலி மீண்டும் அணிக்குத் திரும்புகிறார். வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது நீக்கப்பட்டுள்ளார். புவனேஷ்குமார் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் உள்ளே வந்துள்ளனர்.

ரோகித் ஷர்மாவுக்கு ஓய்வு வழங்கப்படவில்லை. கேதர் ஜாதவ் நீக்கப்பட்டு, வாஷிங்டன் சுந்தர் இடம்பெற்றுள்ளார். இந்திய ஒருநாள் அணியில், ஆல்ரவுண்டர் ஷிவம் துபே வாய்ப்புப் பெற்றது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

ஷர்துல் தாகூர், நவ்தீப் சைனி, சஞ்சு சாம்சன் மற்றும் ராகுல் சகார் ஆகியோருக்கு எதிர்பார்த்தும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இரண்டு தொடர்களுக்குமே விராத் கோலி கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.