அர்ச்சனா பிக்பாஸ் வீட்டின் பாட்டியாகவும், அவர் வைத்திருக்கும் பத்திரத்தை குடும்பத்தினரில் ஒருவரான சோம், ரம்யா மற்றும் கேப்ரியல்லா திருடுவது போன்ற ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. சனம், ரமேஷிற்கு பிள்ளைகளாக ஷிவானி மற்றும் பாலாஜியை பிக்பாஸ் நியமித்தார். ஷிவானி பாலாஜி இருவரும் அண்ணா, தங்கை என்று பேசிக் கொண்டதும், சிவகார்த்திகேயனின் “எங்க அண்ணன், எங்க அண்ணன்” பாடலைப் பாடியதும் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இன்றைய ப்ரோமோவில் நேற்று அந்த பத்திரம் திருடப்பட்டது. இதனை அடுத்து ஒருவர் மாற்றி ஒருவர் பழி போட்டு கொண்ட போட்டியாளர்களில், பாலா மற்றும் கேப்ரியல்லா இடையே கடுமையான வாக்குவாதம் முற்றுகிறது.

இரண்டாவது ப்ரோமோவில் பாலாஜிகாக ஷிவானி பேச வர, அவருக்கும் கேபிக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்படுகிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில் வார்த்தைகள் தடுமாறுவதையும் பார்க்க முடிகிறது.