இஸ்லாமாபாத்: நியூசிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி இழந்ததையொட்டி, விராத் கோலியின் படையை விமர்சித்துள்ளார் பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர்.

ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என்ற அடைமொழியால் குறிப்பிடப்பட்ட சோயப் அக்தர், ஒருகாலத்தில் உலகின் அதிவேகப் பந்துவீச்சாளர் என்ற பெயரைப் பெற்றிருந்தார்.

தற்போது, இவர் இந்திய அணி தொடர்பாகவும், பாகிஸ்தான் அணி தொடர்பாகவும் தொடர்ந்து பல கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். சில கருத்துகள் சர்ச்சைகளையும் கிளப்புகின்றன.

டி20 தொடரை 5-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்றதற்கு பெரியளவில் பாராட்டியிருந்தார் சோயப். ஆனால், ஒருநாள் தொடரை இழந்தபோது விமர்சிக்கவும் தவறவில்லை.

கடைசி நேரத்தில் நியூசிலாந்தை அதிக ரன்கள் எடுக்கவிட்ட இந்திய பவுலர்களை விமர்சித்துள்ள அவர், எளிய ரன்களை சேஸிங் செய்யத் தவறிய பேட்ஸ்மென்களையும் விமர்சித்துள்ளார். மேலும், இந்திய அணியில், தேவையான நேரத்தில் விக்கெட்டுகளை எடுக்கவல்ல ஸ்டிரைக்கிங் பந்துவீச்சாளர் இல்லை என்று கூறியுள்ளார் அக்தர்.